காதலில் கொடுமை பிரிவு என்றாய்
பிரிவில் இனிமை நினைவுகள் என்றாய்
நினைவில் கொடுமை வெறுமை என்றாய்
வெறுமையில் இனிமை அமைதி என்றாய்
அமைதியின் உருவம் என் கண்கள் என்றாய்
கண்கள் நிறைய காதல் தந்தாய்
கண் மூடியும் கனவாய் நின்றாய்
காயங்களோடா பிரிந்து சென்றாய்
காதலில் கொடுமை பிரிவு என்பேன்………