நம்பிக்கை

நவம்பர் 4, 2009

பூமி சுற்றினால் இரவும் பகலாகும்
கண்கள் மூடினால் அதுவும் இரவாகும்
இரவை நிலவு வெறுப்பதும் இல்லை
இரவின்றி நிலவும் வருவதுமில்லை
இரவும் நிலவும் இயற்கையின் இணைப்பாகும்
அதை மாற்ற நினைப்பது நகையாகும்
கண்கள் சிந்தும் கண்ணீருக்கு
காரணங்கள் இருந்தாலும்
காலம் செய்த காயங்களுக்கு
காலமே மருந்தாகும்
கண்கள் மூடிய பூனையின்
கற்பனைகள் யாவும் கானல் நீராகும்
செய்த செயல்கள் நல் உரமாகும் எண்ணத்தில்
சரித்திரம் படைக்கும் திட்டங்கள் பல உருவாகும்
நல் துணிவு கொண்ட நெஞ்சினால் வரலாறு உருவாகும்
அது எல்லோர்க்கும் வரமாகும்


அம்மா

நவம்பர் 4, 2009

எல்லோரும் பாடும் பாடல் நீ
அன்பிற்கான தேடல் நீ
அர்பணிப்பின் சுவாசம் நீ
அமுத மொழிகளின் தேசம் நீ
சகிப்புத்தன்மையின் சிகரம் நீ
கடவுளின் உருவம் நீ
எனக்காக சுவாசித்தவள் நீ
என்னை அதிகம் நேசித்தவள் நீ
நீ இன்றி உலகில்லை
மூன்றெழுத்து அதன் எல்லை


Follow

Get every new post delivered to your Inbox.