பூமி சுற்றினால் இரவும் பகலாகும்
கண்கள் மூடினால் அதுவும் இரவாகும்
இரவை நிலவு வெறுப்பதும் இல்லை
இரவின்றி நிலவும் வருவதுமில்லை
இரவும் நிலவும் இயற்கையின் இணைப்பாகும்
அதை மாற்ற நினைப்பது நகையாகும்
கண்கள் சிந்தும் கண்ணீருக்கு
காரணங்கள் இருந்தாலும்
காலம் செய்த காயங்களுக்கு
காலமே மருந்தாகும்
கண்கள் மூடிய பூனையின்
கற்பனைகள் யாவும் கானல் நீராகும்
செய்த செயல்கள் நல் உரமாகும் எண்ணத்தில்
சரித்திரம் படைக்கும் திட்டங்கள் பல உருவாகும்
நல் துணிவு கொண்ட நெஞ்சினால் வரலாறு உருவாகும்
அது எல்லோர்க்கும் வரமாகும்
நம்பிக்கை
நவம்பர் 4, 2009அம்மா
நவம்பர் 4, 2009எல்லோரும் பாடும் பாடல் நீ
அன்பிற்கான தேடல் நீ
அர்பணிப்பின் சுவாசம் நீ
அமுத மொழிகளின் தேசம் நீ
சகிப்புத்தன்மையின் சிகரம் நீ
கடவுளின் உருவம் நீ
எனக்காக சுவாசித்தவள் நீ
என்னை அதிகம் நேசித்தவள் நீ
நீ இன்றி உலகில்லை
மூன்றெழுத்து அதன் எல்லை
vaasal பதிப்பித்தது. 


